சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
5.058
திருநாவுக்கரசர்
தேவாரம்
தலை எலாம் பறிக்கும் சமண்கையர் பண் - திருக்குறுந்தொகை (திருப்பழையாறை வடதளி சோமேசுவரர் சோமகலாநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=7xesNMOZbZs |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.058  
தலை எலாம் பறிக்கும் சமண்கையர்
பண் - திருக்குறுந்தொகை (திருத்தலம் திருப்பழையாறை வடதளி ; (திருத்தலம் அருள்தரு சோமகலாநாயகியம்மை உடனுறை அருள்மிகு சோமேசுவரர் திருவடிகள் போற்றி )
பழையாறை வடதளியில் உள்ள சிவபெருமானை எவரும் வழிபடாவண்ணம், திருக்கோயிலின் சன்னதியையும் விமானத்தையும் சமணர்கள் மறைத்து மூடி வைத்திருந்தனர், இதனை அறிந்த அப்பர் பிரான், மறைக்கப்பட்ட சிவபெருமானின் திருமேனியைக் கண்டால் அல்லது பழையாறை வடதளி தலத்தை விட்டு அகலமாட்டேன் என்ற உறுதியுடன், உண்ணாவிரதம் நோன்பு இருந்தார். இந்த செய்தி, சிவபெருமானால் பல்லவ மன்னனுக்கு அவனது கனவில் உணர்த்தப்பட்டது. மன்னனும் பழையாறை விரைந்து வந்து, அங்கிருந்த சமணப் பள்ளியில் தங்கியிருந்த சமணர்களை விரட்டியடித்தான். மேலும் விமானத்தையும் சன்னதியையும் மறைத்திருந்த மறைப்புகளை அகற்றி, பெருமானின் பூசனைக்கு வேண்டிய பொருட்கள் நிலையாக கிடைப்பதற்காக நிபந்தங்கள் செய்த பின்னர், நாவுக்கரசரை வணங்கினான். அப்பர் பிரானும், திருக்கோயிலின் உள்ளே சென்று, தலை எலாம் பறிக்கும் என்று தொடங்கும் பதிகத்தினை பாடினார்.
தலை எலாம் பறிக்கும் சமண்கையர் உள்- நிலையினால் மறைத்தால் மறைக்க ஒண்ணுமே? அலையின் ஆர் பொழில் ஆறை வடதளி நிலையினான் அடியே நினைந்து உய்ம்மினே! | [1] |
மூக்கினால் முரன்று ஓதி அக் குண்டிகை தூக்கினார் குலம் தூர் அறுத்தே தனக்கு ஆக்கினான் அணி ஆறை வடதளி நோக்கினார்க்கு இல்லையால், அருநோய்களே. | [2] |
குண்டரை, குணம் இல்லரை, கூறை இல் மிண்டரை, துரந்த(வ்) விமலன் தனை; அண்டரை; பழையாறை வடதளிக் கண்டரை; தொழுது உய்ந்தன, கைகளே. | [3] |
முடையரை, தலை முண்டிக்கும் மொட்டரை, கடையரை, கடிந்தார்; கனல் வெண்மழுப்- படையரை; பழையாறை வடதளி உடையரை; குளிர்ந்து உள்கும், என் உள்ளமே. | [4] |
ஒள் அரிக்கணார் முன் அமண் நின்று உணும் கள்ளரைக் கடிந்த(க்) கருப்பு ஊறலை, அள்ளல் அம் புனல் ஆறை வடதளி வள்ளலை, புகழத் துயர் வாடுமே. | [5] |
நீதியைக் கெட நின்று அமணே உணும் சாதியைக் கெடுமா செய்த சங்கரன், ஆதியை, பழையாறை வடதளிச் சோதியை, தொழுவார் துயர் தீருமே. | [6] |
திரட்டு இரைக்கவளம் திணிக்கும் சமண்- பிரட்டரைப் பிரித்த(ப்) பெருமான் தனை, அருள்-திறத்து அணி ஆறை வடதளித் தெருட்டரை, தொழத் தீவினை தீருமே. | [7] |
ஓது இனத்து எழுத்து அஞ்சு உணராச் சமண் வேதனைப் படுத்தானை, வெங் கூற்று உதை பாதனை, பழையாறை வடதளி நாதனை, தொழ நம் வினை நாசமே. | [8] |
வாய் இருந்தமிழே படித்து, ஆள் உறா ஆயிரம்சமணும் அழிவு ஆக்கினான் பாய் இரும் புனல் ஆறை வடதளி மேயவன்(ன்) என வல்வினை வீடுமே. | [9] |
செருத்தனைச் செயும் சேண் அரக்கன்(ன்) உடல், எருத்து, இற(வ்) விரலால் இறை ஊன்றிய அருத்தனை; பழையாறை வடதளித் திருத்தனை; தொழுவார் வினை தேயுமே. | [10] |